உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை.

உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை.

உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை.

உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை.
கோவை மாவட்டம் துடியலூர் ராக்கிபாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவகள் யானையின் உடலை ஆய்வு செய்தனர்.இறந்த யானைக்கு பதிமூன்று வயது இருக்கலாம் எனவும் இரண்டு தினங்குகளுக்கு முன் இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாயில் பலத்த காயமடைந்ததால் உணவு,தண்ணீர் அருந்த முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து இறக்கலாம் என்று கூறப்படுகிது.எனினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு யானை உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story