சிவகாசியில்" என் வாக்கு என் உரிமை"விழிப்புணர்வு பேரணி...

சிவகாசியில்" என் வாக்கு என் உரிமை"விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில், தூய்மை பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி மாநகராட்சி சார்பில், வாக்களிப்பதை வலியுறுத்தியும், வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தியும்,'என் வாக்கு என் உரிமை' விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள காரனேசன் சந்திப்பு பகுதியில் இருந்து, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.காரனேசன் காலனி,பழனியாண்டவர் காலனி,பிகேஎஸ்ஏ ஆறுமுகம் சாலை, புறநகர் சாலை வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்தில், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள்,தூய்மை பணியாளர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள்,விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story