மர்ம நபர்கள் செயின் பறிப்பு

சாலையில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செயின் பறித்து தப்பிச் சென்றனர்.
துறைமங்கலம் நியூ காலனி, விவேகானந்தர் நகர் பகுதியில், சாலையில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நம்பர்கள் செயின் பறிப்பு போலீசார் விசாரணை. சென்னை ராமாபுரம், ராயிலா நகர் பகுதி சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி கமலவேணி, வயது - 60 இவரது தங்கை வசந்தா, பெரம்பலூர், துறைமங்கலம் நியூ காலனி பகுதியில் உள்ள விவேகானந்தர் நகர் பகுதியில் வசித்து வருகிறார், இவரது வீட்டிற்கு சென்னையில் இருந்து வந்த கமலவேணி, ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7 மணியளவில், அருகே உள்ள தெருவிற்கு நடந்து சென்றுள்ளார், அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கமலவேணி கழுத்தில் இருந்த 8.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர் இதனைத் தொடர்ந்து , பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு சம்பவத்தில், ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story