முதியவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

முதியவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
சடலம் மீட்பு 
தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி சரபங்கா ஆற்றில் மிதந்து வந்த முதியவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி சரபங்கா ஆற்றில் மிதந்து வந்த முதியவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் உடல் அழுகி மிதந்து கொண்டிருப்பதாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் தாரமங்கலம் போலீசார் விரைந்து சென்று முதியவர் இறந்தது குறித்து அவரது உடலை மீட்க வேண்டும் என்ற நோக்கில் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து சரபங்கா ஆற்றில் உடல் அழுகி நிலையில் சடலமாக கிடந்த முதியவரை மீட்டனர். தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி குறுகலாம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி என்கிற நடராஜன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரது மனைவி கமலா மற்றும் மகன் சங்கர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடராஜனின் தங்கச்சி தனலட்சுமியின் வீடு சின்னபிள்ளையூர் என்ற பகுதியில் இருப்பதால் அவரது வீட்டுக்கு வந்து சென்றிருக்கலாம் எனவும், அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து தாரமங்கலம் போலீசார் முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story