லாலாபேட்டை அருகே மர்ம கும்பல் செல்போன் பணம் பறிப்பு

லாலாபேட்டை அருகே மர்ம கும்பல் செல்போன் பணம் பறிப்பு

கோப்பு படம்


லாலாபேட்டை அருகே மது அருந்தி கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்த மர்ம கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமம் சிலோன் காலனி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது (42) ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனரான மணிகண்டன் வயது (40) ஆகிய இருவரும் நேற்று இரவு பள்ளேரி -வசூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேலே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த இடத்திற்கு அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரையும் பார்த்து யாரு டா இங்கு எந்த ஊர் என கேட்டு மிரட்டல் விடுத்தோடு ஆபாசமாக பேசி ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை கடுமையாக தாக்கி விட்டு ரவிக்குமாரிடம் வைத்திருந்த 20,000 ரூபாய் மற்றும் இரண்டு பேரின் செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடிள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கி விட்டு பணம் மற்றும் செல்போன்களை பறித்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதோடு மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்..

Tags

Next Story