பைக்கை திருடி எரித்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை!

பைக்கை திருடி எரித்த மர்ம நபர்கள் -  போலீசார் விசாரணை!

எரிக்கப்பட்ட பைக் 

தூத்துக்குடியில் வாலிபரின் பைக்கை திருடி எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி மகன் காளிமுத்து (35). இவர் காற்கனி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவரது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இன்று காலை பார்ததபோது பைக்கை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தபோது, அவரது பைக் அடுத்த தெருவில் குப்பை மேட்டில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பைக்கை திருடி எரித்தது யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story