பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு மர்ம நபர் தீக்குளிப்பு - விசாரணை

பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு  மர்ம நபர் தீக்குளிப்பு - விசாரணை

தீக்குளித்தவர் மீட்பு 

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை எதிர்புறம் உள்ள காந்தி சிலை அருகே நேற்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, உடம்பில் பற்றி எரிந்த தீயை அணைத்து பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.போலீசார் விரைந்து வந்து தீக்குளித்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீக்குளித்த நபர் யார்? இங்கு எதற்காக வந்தார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவருடைய உறவினர்கள் யார் என்பது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story