திருடன்... திருடன் என கூச்சலிட்ட பெண்... பரபரப்பு

திருடன்... திருடன் என  கூச்சலிட்ட பெண்... பரபரப்பு
கோப்பு படம்
சுசீந்திரம் அருகே வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேவகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் மனைவி ராதா (54). இவர், கோட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வழக்கம்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வேலைக்கு சென்று வருகிறார்.

தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் பஸ்ஸில் ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று மாலை 5 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். தேரூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் செயினை பறித்தார்.

ராதா திருடன் திருடன் என்ற கூச்சலிட , அதற்குள் மர்ம நபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து ராதா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடுப் போன நகையின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

Tags

Next Story