ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடிய மர்மநபர் - போலீசார் வலைவிச்சு

ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடிய மர்மநபர் - போலீசார் வலைவிச்சு

ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடிய மர்மநபர்

உதவுவது போல் நடித்து மாற்று ஏடிஎம் கார்டு கொடுத்துவிட்டு ,வங்கி கணக்கில் இருந்த பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு கடந்த ஜனவரி 25ம் தேதி கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்-க்கு சென்றுள்ளார்.அப்போது பணம் எடுக்க சற்று தடுமாறிய போது பின்னால் இருந்த மர்ம நபர் உதவி செய்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த மாரியப்பன் கைப்பேசிக்கு 15ஆயிரம் பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குறு தகவல் வந்தது.இதைக்கொண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் இருப்பு குறித்து ஏடிஎம் கார்டு மூலம் பார்க்க சென்ற போது கார்டு தவறானது என தெரிய வந்தது. இதனால் வடக்கு காவல்நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சியை பாரத்த போது மர்ம நபர் ஏடிஎம் கார்டு மாற்றிக்கொடுத்தது தெரியவந்து. இதனால் போலீசார் மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story