கடையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

கடையின் பூட்டை உடைத்து  கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

கோப்பு படம்


கோவையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் திருடி சென்றனர்.

கோவை தடாகம் சாலை பால் கம்பெனி அருகே வசித்து வருபவர் பாஸ்கரன்.இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.நீண்ட நாட்களுக்கு பின் நேற்று முன் தினம் கடைக்கு வந்தவர் அருகிலுள்ள நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிகரெட், பேனா,சோப்பு,ஷாம்பு,பிளேடு பாக்கெட் ஆகிய பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story