பணம்,நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

பணம்,நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

பணம்,நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

ஐந்து பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி நகை,பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது சபீர். இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை,மனைவி, மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதுடன் வீட்டில் இருந்த ஐந்து பேரையும் கட்டி போட்டு அங்கிருந்த நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.மெக்கா செல்வதற்காக வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வீட்டில் இருந்த 60 சவரன் நகை, வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளையர்கள் வெளியேறிய பின்னர் வீட்டில் இருந்தவர்கள் சப்தமிட்டதால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கொள்ளை நடத்தது தெரியவந்துள்ளது. போலீசார் சம்பவ இட்டத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைபற்றியுள்ள போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story