காங்கிரஸ் நிர்வாகி காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்

காங்கிரஸ் நிர்வாகி காருக்கு தீ வைத்த  மர்மநபர்கள்

தீ வைக்கப்பட்ட கார் 

திருச்சி பொன்மலை கோட்ட காங்கிரஸ் தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே மேல கல் கண்டார் கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பாலசுந்தர் . இவர் காங்கிரஸ் கட்சியில் பொன்மலை கோட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்கள் , மருமகள்கள் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்கு வெளியில் பெரிய வெளிச்சம் போல் ஏதோ எரிவது போல் பாலுவின் மகனுக்கு தெரிந்துள்ளது.

உடனடியாக பாலுவின் மகன் தூக்கத்திலிருந்து எழுந்து மாடியில் இருந்து பார்த்தபொழுது தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தந்தை பாலசுந்தர் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்களும் வெளியே வந்து அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக வீட்டில் இருந்த தண்ணீர் குடங்களை எடுத்து வந்து நீண்ட நேரம் போராடி காரில் எறிந்த தீயை அணைத்தனர்.

இதுகுறித்து உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயிருந்த காட்சிகளையும் சோதனை செய்தனர். அந்த கேமராவில் இரண்டு வாலிபர்கள் வந்து வாகனத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடுவது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது சம்பந்தமாக பாலச்சந்தரிடம் கேட்ட பொழுது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதியில் பூச்சொரிதல் விழா நடைபெற்றதாகவும் அதில் தனது இளைய மகனுடன் சிலர் வாக்குவாதத்தில் சில வாலிபர்கள் ஈடுபட்டதாகவும் இது சம்பந்தமாக நேற்று கூட தனது இளைய மகனை மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறினார். இது சம்பந்தமாக பாலு அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த வாலிபர்களின் உருவங்களை வைத்து வலை வீசி தேடி வருகின்றனர். காங்கிரஸ் கோட்டத் தலைவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story