பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள்

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள்
அச்சிறுபாக்கத்தில் டூவீலரில் கணவருடன் பயணித்த பெண், கழுத்தில் அணிந்திருந்த நகையை, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஓம் சக்தி நகர் பகுதியில் சரவணன், 35, சரிதா, 27, என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று இரவு மேல்மருவத்துாரில் இருந்து அச்சிறுபாக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சுலேகா ஹோட்டல் அருகில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சரிதா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தில், நிலைக்குலைந்த கணவன் - மனைவி இருவரும், இருசக்கர வாகனத்தில் இருந்து, சாலையில் கீழே விழுந்துள்ளனர். இதில், காயம் அடைந்தவர்களை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story