மர்ம திருடன் போலீஸில் ஒப்படைப்பு

மர்ம திருடன் போலீஸில் ஒப்படைப்பு

பழனியில் சிறுவர்களின் சைக்கிள் தொடர்ந்து திருடிய மர்மத்திருடனை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

பழனியில் சிறுவர்களின் சைக்கிள் தொடர்ந்து திருடிய மர்மத்திருடனை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழனி அருகே பொதுமக்கள் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பழனி பகுதியில் சிறுவர்கள் நிறுத்தும் சைக்கிள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இந்த சைக்கிளை மர்மநபர் திருடுவதாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். மர்மமான திருடரை பிடிக்க வேண்டும் என போலீசிலும் புகார் அளித்தனர்

போலீசார் மாறுவேடத்தில் தேடியபோதும் அந்த திருடனை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில்பழனி பழைய தாராபுரம் சாலையில் சைக்கிள் திருடனை பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அப்பகுதியில் சைக்கிள் ஒன்றை திருடிச்சென்ற நிலையில் இன்றும் அதே பகுதியில் சைக்கிள் திருட வந்தார். சிசிடிவி காட்சியை வைத்து அடையாளம் கண்டு அப்பகுதி பொதுமக்கள் பிடித்தனர் . பின்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story