நாம் தமிழர் கட்சி அறிமுக கூட்டம்!

நாம் தமிழர் கட்சி அறிமுக கூட்டம்!

 நாம் தமிழர் கட்சி

பொன்னமராவதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. எழிலரசி அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. எழிலரசி அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமை வகித்தார்.

மாநில உழவர் பாசறைபொறுப்பாளர் உ. சிவராமன், மாநில கொள்கைப் பரப்புச்செயலர் மூ. அருணகிரி, மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செ. அனீஸ்பாத்திமா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. எழிலரசி பேசுகையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 7 முறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு முறை கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தும் விவசாயிகளின் நலன் காக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.

சிவகங்கை பகுதியில் பனை சார்ந்த பொருள்களைக் கொண்டு தற்சார்பு பொருளாதாரம் கொண்டு வரலாம். எனவே என்னை வெற்றி பெறச்செய்தால் உங்களின் குரலாக நாள் மக்களவையில் நான் ஒலிப்பேன். மாநில உரிமைகளைப் பாதுகாப்பேன் என்றார்.

கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலர் முத்துராமன், நகரச்செயலர் சுரேஷ் உள்ளிட்டோர்முன்னதாக திருக்களம்பூரில் தொடங்கி, வேந்தன்பட்டி, ஆலவயல், மேலத்தானியம், காரையூர், ஒலியமங்கலம், பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட இடங்களில் வி. எழிலரசி வாக்குகள் சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story