நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!!

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!!

பைல் படம்

சத்தான்குளம் அருகே விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரான நாம் தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரி மங்கலம், அம்பலசேரி பகுதியில் எந்த பாதுகாப்பு வசதி இல்லாமல் அஜாக்கிரதையாக விதிகளை மீறி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக லாரிகளில் பாரங்களை ஏற்றி வாகனங்கள் வந்து செல்வதாக புகார் எழுந்ததையடுத்து வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர் அப்போது அதில் வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.

அதில் அளவுக்கு அதிகமாக சல்லிகள் ஏற்றப்பட்ட நிலையிலும் எந்தப் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் இருந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து வருவாய்த் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து சாததான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில். உதவி ஆய்வாளர் ரெத்தினராஜ் வழக்குபதிந்து மினி லாரியை பறிமுதல் செய்து வாகனத்தை ஒட்டி வந்த செட்டிகுளம் திருவரங்க னேரி ஜெயராஜ் மகன் நவீன் (40) என்பவரை கைது செய்தனர்.

நவீன், நாம் தமிழர் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story