நாம் தமிழர் நிர்வாகி படுகொலை - சேலத்தில் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் நிர்வாகி படுகொலை - சேலத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய தலைவராக இருப்பவர் சேவியர் குமார். இவர் கடந்த 20 தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், தமிழக முதல்வரை கண்டித்தும், கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story