நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

பள்ளிபாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மு.கார்மேகன் என்பவர் போட்டியிடுகிறார். தொடர்ந்து தொகுதியின் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியினர், பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடச்சநல்லூர், பாப்பம்பாளையம், ஆவத்திபாளையம், சில்லாங்காடு,ஆலாம்பாளையம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட ஆவரங்காடு ,ஜீவா செட் ,பள்ளிபாளையம், குமாரபாளையம் பிரதான பகுதிகள் என நகரின் பல்வேறு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் வேட்பாளர் கார்மேகன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . மைக் சின்னத்தில் பொதுமக்கள் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் பொன்.சுரேஷ், குமாரபாளையம் தொகுதி தலைவர் ராஜகோபால் மற்றும் நகர, ஒன்றிய ,பேரூர் பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் இந்த பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர்..

Tags

Next Story