ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லியம்பாளையம், ராமநாயக்கன்பாளையம், கொத்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள பெண்களிடம் மத்தியில் ஆண்ட மோடி அரசும் காங்கிரஸ் அரசும் நாட்டு மக்களை சீரழித்து விட்டதாகவும் தற்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி மதுபான விற்பனையில் தமிழகம் சாதனை படைத்த வருவதாகவும் தற்போது நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பெற்றால் தலைவாசல் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையில் குளிர்பதனக்கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆத்தூர் பகுதி பாக்கு மரங்களும் வெத்தலை தோப்புக்களுமாக இருந்த நிலையை மாறி தற்போது தடுப்பணைகள் அமைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறி விவசாயிகளுக்காக போராடக்கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்றும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சூறாவளி பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story