நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பெயர், ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், களரம்பட்டி, லாடபுரம் ஆகிய கிராமங்களில் கொடியேற்றும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் தங்க இரத்தினவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து, கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து கட்சியின் மேற்கு பகுதி கிளைப்பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் இலாடபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வழிமுறைகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story