ஆலைகள் மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் மனு

ஆலைகள் மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் மனு

மனு அளிக்க வந்த நாம் தமிழர் கட்சியினர் 

காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலைகளால் ஏற்படும் மாசு குறித்து நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் யுவராணி, மாவட்ட பொருளர் செந்தில், தொகுதி செயலர் சத்தியமூர்த்தி, தொகுதி தலைவர் ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story