நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி!

நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி!

நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி ஏராளமான சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்பு
தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பேணும் வகையில் 8 கிலோமீட்டர் தூரம் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டம் கடந்த மாதம் சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பொற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலர் மருத்துவர் ரஞ்சித் வினோத் மாவட்ட திட்ட அலுவலர் மருத்துவர் கன்னியம்மாள் ,மதுரம் பிரைட்டம், அந்தோணிசாமி ஊள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் ஏராளமான கலந்துகொண்டு நடை பயணம் மேற்கொண்டனர்.

Tags

Next Story