ஹெல்மெட் அணிந்து நாகை எஸ்பி விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிந்து நாகை எஸ்பி விழிப்புணர்வு

விழிப்புணர்வு வாகன பேரணி 

ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் நாகை எஸ்பி ஹர்சிங் தலைமையில், நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும் போன்றவைகள் குறித்து எஸ்பி ஹர்ஸிங் விழிப்புணர்வு உரையாற்றினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story