நாகை : பொங்கல் பரிசு வழங்க இன்று முதல் டோக்கன்

நாகை : பொங்கல் பரிசு வழங்க இன்று முதல் டோக்கன்


மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்


நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்க இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தகவல் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் இதையடுத்து நாகை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 7ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரேஷன் கடையில் ரூபாய் ஆயிரம் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் இவ்வாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கூறியுள்ளார்

Tags

Next Story