தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில், மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில், மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில், மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் நடந்துள்ள வேலைகளை விவரித்தார். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நிதிநிலை விபரத்தை தெரிவித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வே.சித்ரா, நாகை வட்டச் செயலாளர் கே.இரவிச்சந்திரன், கீழ்வேளூர் வட்ட நிர்வாகி பாலாம்பாள், மாவட்ட நிர்வாகிகள் அருளேந்திரன், சசிகலா உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திராவிட மாடல் அரசின் முடிவின்படி, நாகப்பட்டினம் அருகில் ஒரத்தூர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டை ஒட்டி நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மருத்துவமனையின் பெரும்பாலான மருத்துவப் பிரிவுகள் ஒரத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளன.

மாறுதல் என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டதே என்ற அடிப்படையில், வளர்ச்சி என்ற நோக்கில் ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது. மருத்துவக் கல்லூரி சென்றுவர சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை, இருப்பதாக சொல்லப்படும் சில பேருந்து வசதிகள் போதுமானதாக இல்லை என்பதோடு, ஒரத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை என்பது நோயாளிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமத்தை உருவாக்குவதாகும். முழுமையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும், முழுமையான தண்ணீர் வசதிகள் செய்து தர வேண்டும், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், வரும் வழியில் ஏற்பட சாத்தியமான திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி முதல் பாப்பா கோயில் வரை முழுமையான லைட் வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் நாகப்பட்டினம் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக தற்போதைய மருத்துவமனையிலேயே தஞ்சாவூர் இராஜாமிராசுதார் மருத்துவமனையில் செயல்படுவதைப்போன்று மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரவு மற்றும் குறைந்த அளவு படுக்கை வசதியுடன் அவசர சிகிச்சை பிரவு நாகப்பட்டினம் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், அதேபோல் புற்றுநோய், காசநோய், தொழுநோய் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் இதே வளாகத்தில் செயல்பட வேண்டும் எனவும், இயன்முறை சிகிச்சை மையம் மற்றும் இந்திய மருத்துவ பிரிவுகளில் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை முறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை வளாகம் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்கேற்ப பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இருக்கின்ற மருத்துவமனையை இழந்துவிட்டோமோ என்று ஆதங்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து பிரிவினரையும் அழைத்துப் பேசி முறையான அறிவிப்பை / ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 14.05.24 செவ்வாய்க்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை முன்பு நடத்துவது என்று இன்றைய மாவட்டச் செயற்குழு தீர்மானிக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story