நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக  சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது 

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் .கார்த்திகேயன மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.

பின்பு கயிறு இழுத்தல், உறியடி போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது,அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story