நாகராஜா கோவிலில் ரூ. 1 கோடியில் திருப்பணிகள் தீவிரம்

நாகராஜா கோவிலில் ரூ. 1 கோடியில் திருப்பணிகள் தீவிரம்

தரையில் கற்கள் பதிக்கும் பணி

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இங்கு ரூ 1 கோடியில் திருப்பணிகள் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக ரூ 70 லட்சத்தில் தரை தளத்தில் கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. இந்த பணிகள் தற்போது வேகமாக நடக்கிறது. இந்த திருப்பணியில் மகாமேரு மாளிகையும் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 100 கோயில்களில் திருப்பணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. பின்னர் மேலும் 100 கோயில்களில் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 60 கோயில்களில் திருப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

Tags

Next Story