நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து : தெற்கு ரயில்வே

நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து  : தெற்கு ரயில்வே
பைல் படம்
ரெட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையங்கள் இடையே ரெட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து காலை 7. 50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண் 163221), மர்மக்கமாக கோவையிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (16322) இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 27ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இதே போல நாகர்கோவிலில் இருந்து காலை 7 .50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) வரும் 28ஆம் தேதி நாகர்கோவில் - நெல்லை இடையே பாதி அளவு ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக நெல்லையில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.

மேலும் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5. 25 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503) வரும் 25ஆம் தேதி (நாளை) முதல் 28ஆம் தேதி வரை கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே பகுதி அளவு ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு திப்புருகார் செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் காலை 9:45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16127) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். மறு மார்க்கமாக குருவாயூரிலிருந்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் இரவு 11:25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story