நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்: மேயர் பங்கேற்பு

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்:  மேயர் பங்கேற்பு
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்.
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் நடந்தது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாநகராட்சி மேயர் தமகேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் தே.மு.தி.க நிறுவனத்தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது .

மேலும் மாநகர் வளர்ச்சி பணிகள் குறித்தும், கடந்தகால கனமழை பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் , துணை மேயர் மேரி பிரின்ஸி லதா , மற்றும் மாநகராட்சி பொறியாளர் மாநகராட்சி நல அலுவலர் மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story