நாகர்கோவில் - சேனம்விளை மீண்டும் பேருந்து சேவை துவங்க கோரிக்கை

நாகர்கோவில் - சேனம்விளை மீண்டும் பேருந்து சேவை துவங்க கோரிக்கை

பேருந்து இயக்க கோரிக்கை

நாகர்கோவில் - சேனம்விளை 6 மாதமாக முடக்கப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் துவங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இரணியில், திங்கள்சந்தை வழியாக குளச்சல் அருகே உள்ள சேனம் விளை என்ற இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தடம் எண் 6 ஏ என்ற பேருந்து கடந்த பல வருடங்களாக இயக்கி வந்தது. தினம் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரையில் எட்டு முறை இந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சேனம் விளையில் படுக்கை வசதி கொண்ட அரசு தாலுகா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு வெளியூரில் இருந்து வரும் நோயாளிகள், மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் இந்த பஸ்ஸை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மிகவும் பயன்பட்டு வந்த இந்த பஸ் கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் கிளை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் இந்த பஸ்ஸை அதே தடத்தில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story