நாகர்கோவில் : சூறைக் காற்றில் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்

நாகர்கோவில் : சூறைக் காற்றில் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்

முறிந்து விழுந்த சிக்னல் கம்பம் 

நாகர்கோவிலில் சூறை காற்றுடன் பெய்த மழையால் முறிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. நாகா்கோவில் மாநகரில் காலையில் தொடங்கிய மழை சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில், பின்னர் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். இதில் நாகா்கோவில் மணிமேடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் சூறைக்காற்றால் முறிந்து விழுந்தது. அதை, காவல் துறையினா் அகற்றினா். நாகா்கோவில் ரயில்வே சாலையில் உள்ள பாறைக்கால்மடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. சாலைகளில் முழங்கால் உயரத்துக்கு மழைநீா் பாய்ந்தோடியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனா்.

Tags

Next Story