திருப்பூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல்

திருப்பூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார் Vo திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ம கீ சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து இன்று காலை திருப்பூர் குமரன் நினைவகத்தில் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துவராஜுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் தொகுதிக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும், தான் வெற்றி பெரும் பட்சத்தில் மண் சார்ந்த தொழில்களை பாதுகாக்கவும் நலிவடைந்த தொழில்களையும் மீட்டெடுக்கவும் குரல் கொடுப்பேன் என பேட்டி அளித்தார்.

Tags

Next Story