பிரச்சாரத்தை துவக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

பிரச்சாரத்தை துவக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தை துவக்கினார்.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தை துவக்கினார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக எழிலரசி என்பவர் போட்டியிடுகிறார். ஏற்கனவே, சிவகங்கை, திருப்பத்தூர், ஆலங்குடி போன்ற சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் அறிமுக விழாவை நடத்திய நிலையில் வாக்குகள் சேகரிக்கும் பணியை காரைக்குடியில் தொடங்கினர். காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட ஊர்வலம் முதல் பீட் இரண்டாம் பீட், கல்லுக்கட்டி, செக்காலை ரோடு, பெரியார் சிலை, தேவர் சிலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அரியக்குடியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story