நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு

நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நமது கொங்கு முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் காங்கேயம் எம்.தங்கவேலு கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story