நாமக்கல் ஆஞ்சநேயர் மஹா ராஜா கோலத்தில் வெண்ணெய் காப்பு அலங்காரம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் மஹா ராஜா கோலத்தில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயர் மஹா ராஜா கோலத்தில் வெண்ணெய் காப்பு அலங்காரம்! நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிா்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மஹா ராஜா கோலத்தில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து இருந்தனர். பார்ப்பதற்கு தத்ரூபமாக ஒரு நாட்டின் மஹா ராஜா மாதிரி இருந்தது என்று பக்தர்கள் சொல்லி சென்றனர்! இதில் திரளான பக்தர்கள் கலந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story