புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய ஆட்சியர்!

புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய ஆட்சியர்!

ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சீரிய முயற்சியின் காரணமாக மேற்கண்ட 3 நபர்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்பட்டு வரப்பெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம், எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்மலர் என்பவர் தன்னுடைய கணவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம், இலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.தங்கமணி அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் கிராமம், காட்டு தெரு பகுதியில் வசிக்கும் சங்கீதா அவர்களுடைய மகள் கனிஷ்காவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை பெற வேண்டியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற ஏதுவாக புதிய குடும்ப அட்டை வழங்ககோரி கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தனர்.

மேற்கண்ட மனுதாரர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிடவும் மேற்படி கோரிக்கையினை சிறப்பினமாக கருதி புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தலின்படி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அவர்களுக்கு அனுமதிகோரி கருத்துரு அனுப்பப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியின் காரணமாக மேற்கண்ட 3 நபர்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்பட்டு வரப்பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (18.6.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற ஏதுவாக 3 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

Tags

Next Story