கோடை வெப்பத்தை சமாளிக்க நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

கோடை வெப்பத்தை சமாளிக்க நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

கோடை வெயிலை சமாளிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோடையின் கடும் வெயிலில் இருந்து பாதுகாக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் உமா கீழ்க்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளார். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி, குடை கொண்டு செல்ல வேண்டும். என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story