நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்  பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மாவட்ட தேர்தல் அலுவலர்
100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாளான ஏப்ரல் – 19 (வெள்ளிக்கிழமை) அன்று அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சிலிண்டரில் வைத்து தினமும் 250 நபர்களுக்கு இந்த விழிப்புணர்வு அழைப்பிதழை கொடுங்க; தேங்காய் பழம் தட்டுடன் அழைப்பிதழ் கொடுத்து ஆட்சியர் அன்புடன் அழைப்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்களின் அறிவுறுத்தலின்படி,

6 சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மனிதசங்கிலி, பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல், செல்ஃபி ஸ்டேண்டு, ஒட்டுவில்லைகள், கடைகளில் உள்ள இரசீதுகள், துணி பைகள், பொது விநியோக கடைகளில் வழங்கப்படும் பொருட்கள்,

விளம்பர பதாகைகள் ஆகிய வழிகளில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளூர்கேட் பகுதியில் (26.3.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு 'தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

சமையல் எரிவாயு உருளைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, தேர்தல் நாள் 19.4.2024 அன்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு அழைப்பிதழ் தாம்பூலம் தட்டுடன் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாமக்கல் மாவட்ட முழுவதும் தேர்தல் திருவிழா 100 சதவீதம் வாக்கு பதிவு என வித்தியாசமான அழைப்பிதழை அச்சிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச. உமா அவர்கள் விழிப்புணர்வு செய்யும் நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story