நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா திட்டப் பணிகள் குறித்து ஆய்வு !!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா  திட்டப் பணிகள் குறித்து ஆய்வு !!

ஆட்சித்தலைவர் உமா  

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பன்நாயக்கன்பட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (8.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பன்நாயக்கன்பட்டி, அரசு உதவிப்பெறும் புனித மரி ஆர்.சி துவக்க பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு, புதிதாக சமையல் கூடம் அமைக்க கருத்துரு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, நாமக்கல் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறையில் உள்ள கைதிகளின் விபரம், சிறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சிறையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல் ஊராட்சி, இராமநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதியதாக மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story