இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை செய்த திமுகவினர்

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை செய்த திமுகவினர்

இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் பரப்புரை

தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமணலி ஊராட்சியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளும், 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை தமிழக முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திமுகவினர் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற பரப்புரையை மேற்கொண்டனர்.

மேலும், மக்கள் விரோத பா.ஜ.க., ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், மாநில உரிமைகள் மீட்கவும், அநீதிகளை எடுத்துரைத்தும்மக்களிடம் பேசப்பட்டது. இதில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் செல்வம், கிளைச் செயலாளர்கள் முருகேசன், ஸ்டாலின், குமார், முருகேசன், கனகம், நடராஜன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story