முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்

முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்

முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்

முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

நாமக்கல் அருகே முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

குமாரபாளையம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கார்த்திக் ராஜா, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் அவர்களிடம் புகார் மனு ஒன்று வழங்கினார் .

அதில் சமூக வலைதளத்தில் திருச்செங்கோடு அரசியல் எனும் தலைப்பில் இயங்கும் வாட்ஸ் அப் குழுவில், திமுக ஆட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஒரு சிலர் தவறான செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் சுகுமார் உறுதி அளித்தார்.

Tags

Next Story