நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

திமுக சார்பில் மரியாதை

அம்பேத்காரின் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு விழா, நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. சட்டமேதை அம்பேத்கார், 1891ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே என்ற இடத்தில் பிறந்தார்.

அமெரிக்கா சென்று பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமைக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சரவையில் சட்ட அமைச்சாராகப் பணியாற்றினார். அம்பேத்காரின் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான K.R.N.இராஜேஸ்குமார் MP நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து,

அம்பேத்காரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமூக நீதி உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் நலங்கிள்ளி, திமுக பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நாமக்கல் நகர மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்,

சார்பு அணி நிர்வாகிகள் பொன்.சித்தார்த், பா.கிருபாகரன், வ.இளம்பரிதி, பிரபாகரன், கடல் அரசன் கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story