நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”- பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் நாடாளுமன்றத் தொகுதி கூட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி வலியுறுத்தல் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயம் இனமானப் பேராசிரியா் கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பார்.இளங்கோவன், சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கூட்டப் பொருள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நலங்கிள்ளி, கே.செல்வம், வி.பி.ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மரு.இரா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள், விமலா சிவக்குமார், சரவணன், கண்ணன்,

பூவராகவன், குணசேகரன், மாநில நிர்வாகிகள் முத்துவேல் இராமசுவாமி, இரா.நக்கீரன், ப.கைலாசம், நகர கழகச் செயலாளர்கள் ராணா ஆனந்த், எஸ்.பூபதி, அ.சிவக்குமார், ஒன்றிய ,பேரூர் கழகச் செயலாளர்கள் நகர் மன்ற தலைவர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கு.காளியப்பன் நன்றி கூறினார்.

Tags

Next Story