நாமக்கல்: ஜூன் 28-இல் அஞ்சல் துறை குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல்லில் வரும் ஜூன் 28ம் தேதி அஞ்சல் துறை குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல்லில் அஞ்சல் துறை குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆர்.இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது... அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் “குறை தீர்க்கும் நாள்” கூட்டம் வருகிற ஜூன் 28 ந் தேதி காலை 11 மணியளவில்,நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (ரவி பிளாசா கட்டிடம், ஆண்டவர் பங்க் அருகில்) நடைபெற உள்ளது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின் தங்களது புகார்களை ”அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்-637001” அவர்களுக்கு 26.06.2024க்குள் சென்றடையுமாறு அனுப்பலாம்.

புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது “அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு - சம்பந்தமாக” என்று எழுதப்பட வேண்டும். குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும் அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால் / ஸ்பீடு போஸ்ட் / மணியார்டர் எண், எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும்.

புகார்கள் சேமிப்பு கணக்கில் (அ) அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருப்பின், அதன் அக்கெளண்ட் நம்பர், PLI, RPLI பாலிசி நம்பர், முகவரி மற்றும் எந்த ஆபீசில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story