நாமக்கல்லில் நவ -1-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்லில் நவ -1-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா -  விடுமுறை அறிவிப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி நாமக்கல் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி நாமக்கல் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன சுமார் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு மற்ற கோவில்களைப் போல கோபுரம் இல்லாமல் இருக்கும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 1-ம் தேதி‌ நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் தாலுக்காவில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டும் நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் கல்லூரிகள்‌ வழக்கம் போல் செயல்படும் எனவும் நவம்பர் 1-ம் தேதி விடுமுறை தினத்தை ஈடுகட்ட நவம்பர் 4-ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story