நாமக்கல் : பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்த மாணவிக்கு பாராட்டு விழா !!

நாமக்கலில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பிஏ தமிழ் பாடப்பிரிவு மாணவி எஸ். பவதாரணி பளு தூக்கும் போட்டியில் தமிழ் நாடு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். வேலூர் விஐடி வளாகத்தில் ஆகஸ்ட் 9,10 & 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல வீராங்கனைகள் கலந்து கொண்டதில் இவர் 49 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 111 கிலோ எடையினை தூக்கி இச் சாதனையினை புரிந்துள்ளார். இவருக்கான பாராட்டு விழா இன்று (13/8/24) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், உடற் கல்வி இயக்குனர் வீ. அர்ச்சனா மற்றும் துறைத் தலைவர் ஆர். சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர்.

Tags

Next Story