திமுக எம்பி ஆ. ராசாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திமுக எம்பி ஆ. ராசாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
 திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்புவதை கண்டித்து பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மம்சாபுரம், துலுக்கன் குளம், வாகைக்குளம் பட்டி, வைத்தியலிங்கபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களில் வசிக்கும் வீரகொடி வெள்ளாளர் உறவின் முறையை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்பி. ஆ ராசா, வஉசிதம்பரனார் தனது மகனின் வேலைக்காக பெரியாரிடம் உதவி கேட்டு நின்றதாக அவதூறு பரப்பி பேசியதாக போராட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு அவதூறு பரப்பும் ஆ. ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story