வேலூரில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்

வேலூரில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்

சாலை பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

தார்சாலை மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அமைச்சர் மதிவேந்தன்.

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரையாத்தூர் ஊராட்சி, ஜேடர்பாளையத்தில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், ரூ.3 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நடந்த நிகழ்வில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படமுமடிபாளையம் வார்டு எண் 1-ல் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.49.99 இலட்சம் மதிப்பீட்டில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரையாத்தூர் ஊராட்சி, ஜேடர்பாளையத்தில் சந்தையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் எம்.லட்சுமி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story