நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை..!

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை..!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் பள்ளி நிர்வாகிகள் 

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில், கலைப்பிரிவில் படித்து, பொதுத்தேர்வு எழுதிய தயாநிதி, ஆகாஷ், சுதர்சனா ராஜேந்திரன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.

அறிவியல் பிரிவில் படித்த மாணவிகள் கவுசிகா, கவினா, நிகிதாஸ்ரீ ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் அக்கவுண்டன்சி பாடத்தில் 10 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 8 மாணவர்களும், பொருளாதாரம் பாடத்தில் ஒருவரும், வணிக கணிதம் பாடத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவர் கவிப்பிரியன் அக்கவுண்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ், கப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டாக்டர் குழந்தைவேல், செயலாளர் சந்திரசேகரன், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story