நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அறிக்கை

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அறிக்கை

அறிக்கை

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 14.02.2024(புதன்கிழமை) அன்று திருச்செங்கோடு, வேலூர் ரோடு, மாவட்ட கழக அலுவலகத்தில் தளபதியார் அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், சார்பு அணி தலைவர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற பட உள்ளது 1) மார்ச் 01 ல் பிறந்தநாள் காணும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா தொடர்பாக 2) வருகின்ற 16.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டம் தொடர்பாக. 3) கழக ஆக்கப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற பட உள்ளது

Tags

Next Story